கேள்வி: புத்த மதம் இந்தியாவில் தோன்றியது... ஆனால் அதற்கு இங்கே அவ்வளவு முக்கியத்துவம் தரபபடவில்லை... புத்தரின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது... அதே போல் உங்களுடைய நேர்மறையான வாழ்க்கை முறைகள் ஏற்கப்படும் என்று கருதுகிறீர்களா?
உங்களுடைய சிறிய கேள்வியில் பல வினாக்கள் உள்ளன. புத்தமதம் இந்தியாவில் இறந்துவிட்டது. ஏனெனில் புத்தர் எதனோடும் சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை.. அவர் வேதங்களுக்கும், கடவுளுக்கும் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த போது அவருடைய செரிஸ்மெடிக் பெர்சனாலிட்டி பல லட்சக்கணக்கான மக்களை கவருவதாக இருந்தது. புத்தரின் கருத்துக்களால் குறிப்பாக பிராமணர்கள் அதிர்ந்து போனார்கள்.. அதனால் புத்தத்தை தழுவியவர்களை கொன்று குவித்தனர். அதில் தப்பி பிழைத்தவர்கள் இலங்கைக்கும், பர்மாவுக்கும், சீனாவுக்கும், ஜப்பானுக்கும் தப்பி ஓடினார்கள். ஆனால் அவர்கள் பரப்பியது புத்தத்தை அல்ல . புத்தர் எந்த சமரசத்தை விரும்பாதவராக இருந்தாரோ, அவரை பின் தொடர்ந்தவர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அந்த நாட்டின் கலாசாரத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர். திபெத்தில் தற்போது என்ன இருக்கிறது? அங்கே இறை தேடுதலுடன் புத்தம் கலந்து விட்டிருக்கிறது.. இதே போலதான் மற்ற நாடுகளிலும் அந்தந்த நாட்டின் இறை தேடுதலுடன் புத்தம் கலந்துவிட்டிர்க்கிறது. ஆனால் பவுத்தத்தின் சாராம்சம் முற்றிலுமாக சீரழிந்துவிட்டது. பரிணாம வளர்ச்சி இறந்துவிட்டது. புத்தத்தின் பெயரை அவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் பவுத்தம் இறந்துவிட்டது. புத்தர் இறந்த போதே. எந்த ஒரு மதம் ஆனாலும் அதற்கு உரிய குரு இருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment